
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் 6 விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ரத்து செய்யப்பட்டது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் 645 ஹெக்டேர், 2,300 ஹெக்டேர் பரப்பில் உள்ள 2 சிப்காட் தொழிற்பூங்காக்களில் 68 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நேரடியாக 59 ஆயிரம் பேர், மறைமுகமாக 1.75 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். சிப்காட்டை விரிவாக்க மக்கள் கோரிக்கை விடுத்ததால், மேல்மா உள்ளிட்ட 8 கிராமங்களில் 3,174 ஏக்கர் நிலஎடுப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 7 ஏக்கர் மட்டுமே நஞ்சை நிலம் ஆகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்