Friday, December 29, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/30/large/1175811.jpgமக்கள் சிரமமின்றி அஞ்சலி செலுத்துவதற்கு துரிதமாக ஏற்பாடு செய்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தேமுதிக தலைவரான விஜயகாந்த் மறைவையொட்டி அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு கூட்டம் அளவுக்கு அதிகமாக கூடியதால் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதற்கிடையே விஜயகாந்தின் உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள், சிரமமின்றி அஞ்சலி செலுத்த இடம் ஒதுக்கி கொடுக்கும்படி முதல்வர் ஸ்டாலினிடம் பிரேமலதா கோரிக்கை விடுத்தார்.

அதையடுத்து தீவுத்திடலில் அனைத்து ஏற்பாடுகளும் உடனடியாக செய்யப்பட்டு 6 மணி நேரத்தில் இரவோடு இரவாக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு கொண்டுவரப்பட்டது. சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்நின்று செய்து கொடுத்தார். இதனால் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் வரிசையில் நின்று எந்த சிரமுமின்றி தங்களது கண்ணீரை காணி்க்கையாக்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்