Monday, January 15, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/16/xlarge/1184066.jpgபாலமேடு ஜல்லிக்கட்டு தொடக்கம் | 1000 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

பாலமேடு: மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள பாலமேடு கிராமத்தில் உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்றுள்ள வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட பிறகு போட்டி தொடங்கியது. சுமார் 1,000 காளைகள் மற்றும் 700 மாடுபிடி வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த வகையில் நேற்று பொங்கல் திருநாளை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து இன்றைய தினம் பாலமேட்டில் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்