
சென்னை: துறைகள் வாரியான மானியக் கோரிக்கை விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை நாளை (6-ம் தேதி) கூடுகிறது. முதல்நாளில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது. மானியக் கோரிக்கைகளில் இடம் பெறும் புதிய அறிவிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த மார்ச் 18-ம் தேதி தொடங்கியது. அன்று பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 19-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த இரு பட்ஜெட்கள் மீதும் மார்ச் 21 முதல் 24 வரை விவாதம் நடத்தப்பட்டது. அதன்பின், பேரவை தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்