Monday, July 31, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/01/large/1075472.jpgசென்னை | ஊரப்பாக்கத்தில் ரவுடிகள் இருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

சென்னை: சென்னை - தாம்பரம் பகுதியை அடுத்த ஊரப்பாக்கத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ரவுடிகள் சுட்டுக் கொலை. ரவுடிகளான சோட்டா வினோத் (35) மற்றும் ரமேஷ் (28) மீது காவல்துறையினர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

காரணை புதுச்சேரி செல்லும் பிரதான சாலையில் போலீஸாரை வெட்டிய ரவுடிகள் இருவரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் போலீஸார் தணிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/01/large/1075461.jpgசெங்கல்பட்டில் ரூ.210 கோடியில் மின்கலன் பரிசோதனை மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை: செங்கல்பட்டில் ரூ.210 கோடியில் தனியார் நிறுவன மின்கலன் பரிசோதனை ஆய்வகத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.290 கோடியில் விபத்து பரிசோதனை ஆய்வகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 4,10,561 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.2,73,448 கோடி மதிப்பிலான 224 முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் சில திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/01/large/1075457.jpgவேங்கைவயல் விவகாரத்தில் முன்னாள் நீதிபதி அறிக்கை ஜூலை 28-ம் தேதி தாக்கல்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தனது இடைக்கால அறிக்கையை கடந்த 28-ம் தேதி சமர்ப்பித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் கடந்த 2022 டிச.26-ம் தேதி தெரியவந்தது. தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து முதலில் வெள்ளனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, July 30, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/31/large/1073859.jpgமகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ஆதிதிராவிடர் சிறப்பு நிதி? - தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு நிதி எடுக்கப்படுகிறதா? என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, இத்திட்டம் செப்.15-ம் தேதி தொடங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான முதல்கட்ட விண்ணப்பப் பதிவு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்ட விண்ணப்பப் பதிவு பணிகள் செப்.5-ம் தேதி தொடங்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடியை தமிழக அரச ஒதுக்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/31/large/1074005.jpgதிருச்சியில் தண்டவாள சீரமைப்பு பணி: 20+ ரயில்கள் 5 மணி நேரம் தாமதம் என தகவல்

திருச்சி: திருச்சிராப்பள்ளி சந்திப்பில் தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் 5 மணி நேரம் தாமதம். இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் 5 மணி நேரம் தாமதம். தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாகி உள்ளன. இரு மார்க்கத்திலும் ரயில் சேவை தாமதமாகி உள்ள காரணத்தால் பயணிகள் அவதி. திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்குள் தண்டவாள பராமரிப்பு காரணமாக ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுவதாக தகவல்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/31/large/1073995.jpgதமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 31) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும், ஆக.1 முதல் 5-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/30/large/1072314.jpgலஞ்சம் வாங்கிய புகாரில் தேனி மருத்துவக் கல்லூரி டீன் சஸ்பெண்ட்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

சென்னை: தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஏ.எல்.மீனாட்சிசுந்தரம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில் தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

தேனியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கேன்டீனில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என்றால் தனக்கு பணம் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஏ.எல்.மீனாட்சிசுந்தரம், கேன்டீன் ஒப்பந்ததாரர் மாரிசாமி வசம் பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஏ.எல்.மீனாட்சிசுந்தரம் லஞ்சம் பெறும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, July 29, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/30/large/1072222.jpgகல்வியாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகே பொதுப்பாட திட்டத்தை அமல்படுத்த வேண்டும் - பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து உயர்கல்வித் துறையில் பொதுப்பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் 31 ஆண்டுகால ஆட்சியில், கல்வித் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது. 2011-ல் திமுக ஆட்சியில் உயர் கல்வியில் 25 சதவீதமாக இருந்தமாணவர் சேர்க்கை, அதிமுக ஆட்சியில் 51 சதவீதமாக வளர்ச்சி பெற்று, இந்தியாவிலேயே உயர்கல்வித் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும், முதன்மை மாநிலமாகவும் திகழ்ந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/30/large/1072266.jpgதமிழகத்தில் இன்று வெயில் அதிகரிக்கும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், இன்று முதல் ஆக. 4-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும். ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/30/large/1072261.jpgகிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் பரிதாபம் - பட்டாசு கிடங்கு வெடித்து 9 பேர் உயிரிழப்பு; 15 பேர் பலத்த காயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பட்டாசு கிடங்கில் நேரிட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்தில் 6 கடைகள் தரைமட்டமானதுடன், 10 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெருவைச் சேர்ந்த ரவி (46), அங்குள்ள நேதாஜி சாலையில் பட்டாசு மொத்த விற்பனைக் கடை நடத்திவந்தார். இதற்காக அங்குள்ள கிடங்கில் பட்டாசுகளை இருப்பு வைத்திருந்தார். இவரது கடை அருகில் 2 மரக்கடைகள், வெல்டிங் கடை, நிதி நிறுவனம், ஹோட்டல், ஷோபா தயாரிப்பு நிறுவனம், தண்ணீர் சுத்தகரிக்கும் நிறுவனம் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/29/large/1071275.jpgராமநாதபுரம் தொகுதியிலிருந்து பாஜக வேட்பாளர் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் - அண்ணாமலை பேச்சு

ராமநாதபுரம்: வரும் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியிலிருந்து பாஜக வேட்பாளர் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரையை இன்று மாலை ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் இருந்து தொடங்கி கேணிக்கரை வழியாக அரண்மனையை வந்தடைந்தார். பேரணியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட தலைவர் தரணி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரண்மனை முன்பு அவர் பேசியதாவது, "தமிழகத்தின் மண்ணையும், மக்களையும் நேசிக்கக் கூடியவர் பிரதமர் மோடி. கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.10.76 லட்சம் கோடி நிதியை பிரதமர் வழங்கியுள்ளார். பிரதமர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ் மொழி தொன்மையானது என செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறார். திருக்குறளை 100 மொழிகளில் மொழிபெயர்க்க கூறியுள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனாரின் கூற்றை ஐ.நா. சபையில் தெரிவித்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்தார். நாடாளுமன்றத்தில் தமிழ் கலாச்சாரத்தின் செங்கோலை வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, July 28, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/29/large/1071139.jpgராமேசுவரத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலாம் வாழ்க்கை வரலாறு நூலை வெளியிடுகிறார் அமித் ஷா

ராமேசுவரம்: ‘அப்துல் கலாம் - நினைவுகளுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பிலான ஆங்கிலப் பதிப்பு நூலை ராமேசுவரத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிடுகிறார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை, ‘அப்துல் கலாம் - நினைவுகளுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில், அவரது அண்ணன் மகள் ஏபிஜேஎம் நசீமா மரைக்காயர், விண்வெளி விஞ்ஞானி ஒய்.எஸ்.ராஜன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/29/large/1071186.jpgநெய்வேலி என்எல்சி விவகாரம் | புல்டோசரால் பயிரை அழித்தபோது அழுகை வந்தது - உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வேதனை

சென்னை: நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்காக, பயிரிட்ட நிலத்தில் நெற்பயிர்களை புல்டோசரால் அழித்ததை பார்த்தபோது எனக்கு அழுகை வந்தது என்று வேதனை தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, எம்.தண்டபாணி, அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா என்று கேள்வி எழுப்பினார்.

இரு தரப்பு பிரச்சினை தொடர்பாக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்க கோரி என்எல்சி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்குமாறு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு முறையிடப்பட்டது. அதன் விவரம்:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/29/large/1069992.jpgபோலீஸாக பணியாற்றிக் கொண்டே ‘நீட்’ தேர்வில் வெற்றி - மருத்துவப் படிப்பில் சேர உள்ள தருமபுரி இளைஞர்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்துறையில் பணியாற்றியபடியே ‘நீட்’ தேர்வில் வென்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் முதுகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். கடந்த 2016-ம் ஆண்டு பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார். மருத்துவர் ஆக விரும்பிய சிவராஜுக்கு அப்போதைய சூழலில் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, பி.எஸ்சி., வேதியியல் பயின்றார். இளநிலைப் பட்டப் படிப்பை முடித்த அவர், 2020-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் 2-ம் நிலைக் காவலராக தேர்வானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/29/large/1069991.jpgஸ்ரீவில்லிபுத்தூர் | சதுரகிரி மலையை ஒட்டிய பகுதியில் காட்டுத் தீ

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையை ஒட்டிய ஊஞ்சக்கல் பகுதியில் நேற்று மாலை திடீரென பரவிய காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுமார் 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவு உள்ள வனப்பகுதி 9 பீட்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 5வது பீட்டில் ஊஞ்சக்கல் பாப்பநத்தான் கோயில் பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ பற்றியது. மாலை நேரத்தில் காற்று வேகமாக வீசுவதால் காட்டுத்தீ மளமளவென பரவி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/29/large/1069990.jpgஎன்எல்சி விவகாரம் | விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் - ஜி.கே.வாசன்

மதுரை: என்எல்சி நிறுவனத்துக்கென விளைநிலங்களை கையகப்படுத்துவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து நேற்று நடைபயணம் தொடங்கினார். இந்நிகழ்வில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மதுரைக்கு வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/29/large/1069989.jpgவருமான வரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கரூர் திமுகவினரின் ஜாமீன் ரத்து - நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு

மதுரை: வருமான வரித் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கரூர் திமுகவினர் 15 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது வருமான வரி அதிகாரிகளை தாக்கி ஆவணங்களை பறித்து சென்றதாக திமுகவினர்மீது புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து திமுகவினர் பலரை கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/28/large/1069987.jpg"தமிழகத்தில் நடக்கும் அரசு ஒரு குடும்பம் சார்ந்தது" - நடைபயண தொடக்க விழாவில் அண்ணாமலை பேச்சு

ராமேஸ்வரம்: "கடந்த ஒன்பது ஆண்டுகளில் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. எந்த ஆட்சியிலும் வராத பணம் இது. எந்த ஆட்சியிலும் வராத ஏராளமான திட்டங்கள் தமிழகத்துக்கு கிடைத்துள்ளன." என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கும் வகையிலும் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். இதன் தொடக்கவிழா பொதுக் கூட்டம் ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. இதில் கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, July 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/27/large/1068627.jpgநீதிமன்றத்தில் போனில் பேச கூடாது எனக் கூறியதால் வெளியேறிய மருத்துவர் - வாரண்ட் பிறப்பித்த நீதிபதி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் விபத்து வழக்கில் சாட்சியம் அளிக்க வந்த மருத்துவரை செல்போன் பேச கூடாது என தெரிவித்தால் வழக்கில் ஆஜராகாமல் வெளியேறினார். இதையடுத்து அவருக்கு வாரண்ட் பிறப்பித்து நீதிபதி எம்.ப்ரீத்தா உத்தரவிட்டார்.

ராஜபாளையத்தை சேர்ந்த மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் ராஜபாளையத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். விபத்து வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாலசுப்பிரமணியன் வந்திருந்தார். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்த போது, பாலசுப்பிரமணியன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/27/large/1068626.jpgமக்களவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து டிசம்பரில் அறிவிப்பு - தினகரன் தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘வரும் காலங்களில் பன்னீர்செல்வத்துடன் இணைந்தே செயல்படுவோம். பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும்’ என ஸ்ரீவில்லிபுத்தூரில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நடைபெறும் அமமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.விதினகரன் மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக காரில் சென்றார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் டி.டி.வி தினகரன் சுவாமி தரிசனம் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/27/large/1068625.jpgதிமுக உட்கட்சி பூசல் விஸ்வரூபம்: நெல்லை மாவட்ட பொறுப்பாளர் கொலை மிரட்டல் விடுத்ததாக கவுன்சிலர்கள் தர்ணா

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் திமுக உட்கட்சி பூசல் மீண்டும் விஸ்வரூபமாக வெளிப்பட்டது. மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்து மண்டல தலைவர்கள், பெண் கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்ட அரங்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டனர். கூச்சல், குழப்பத்துக்கு இடையே கூட்டம் நடைபெற்று முடிந்தது.

திருநெல்வேலி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டங்கள் நேற்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக காலை 9.30 மணிக்கு வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இம்மாநகராட்சியில் 55 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் தேர்தலில் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/27/large/1068620.jpgமதுரை விளையாட்டு வீரரின் கணுக்கால் அகற்றம் - மின் ஊழியர்களின் அலட்சியத்தால் நேர்ந்த துயரம்

மதுரை: மதுரையில் மின்கம்பம் சரிந்து விளையாட்டு வீரரின் கால் முறிவு ஏற்பட்டது. புதிய கம்பம் மாற்றும்போது, இச்சம்பவம் நிகழ்ந்தது.

மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தம். இவரது மகன் பரிதி விக்னேஸ்வரன் (19). இவர் கிணத்துக்கடவு பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். ஜூடோ விளையாட்டு வீரரான இவர் விடுமுறைக்கு ஊருக்கு வந்து இருந்தார். இன்னும் ஓரிரு வாரத்தில் தேசிய ஜூடோ போட்டியில் பங்கேற்கும் வகையில் தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, July 26, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/26/large/1067238.jpgஐஎஸ்ஐஎஸ் ஆதரவு டி-சர்ட் அணிந்தவரிடம் பாஸ்போர்ட் பறிமுதல்: திரும்ப வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ரம்ஜான் பண்டிகை நாளில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு ஆதரவாக டி-சர்ட் அணிந்தவரிடம் பறிமுதல் செய்த பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொண்டியை சேர்ந்தவர் முகமது ரில்வான். இவர் நண்பர்களுடன் 29.7.2014-ல் ரம்ஜான் பண்டிகை நாளில் தொண்டி பீச் பள்ளிவாசலில் ‘வீ ஆர் ஆல் ஐஎஸ்ஐஎஸ் என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-சர்ட் அணிந்தபடி நிற்கும் புகைப்படம் முகநூலில் வெளியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/26/large/1067235.jpgஅண்ணாமலை பாதயாத்திரை | சிறப்பு விமானத்தில் வரும் அமித் ஷா - ராமேசுவரத்தில் 2,500 போலீஸார் பாதுகாப்பு

ராமநாதபுரம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் யாத்திரையை ராமேசுவரத்தில் தொடங்கி வைக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விமானம் மூலம் நாளை மறுநாள் மதுரை வருகிறார். இதற்காக ராமேசுவரத்தில் 2500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும், தமிழக மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும், ‘என் மண் என் மக்கள்’ என்ற பாத யாத்திரயை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் (ஜூலை 28-ம் தேதி) ராமேசுவரத்தில் தொடங்குகிறார். இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்து, விழா மேடையில் பேசுகிறார். இவ்விழாவில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி தலைவர்களான முன்னாள் முதல்வர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

ராமேசுவரம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னதாக நாளை மறுநாள் பகல் 1 மணிக்கு டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் மாலை 5 மணிக்கு வந்து இறங்குகிறார். அங்கிருந்து காரில் ராமேசுவரம் சென்று தனியார் தங்கும் விடுதிக்கு சென்றுவிட்டு, அதன்பின்னர் ராமேசுவரம் பேருந்துநிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்குச் செல்கிறார். பின்னர் யாத்திரையை தொடங்கி வைத்து பேசுகிறார். இரவு ராமேசுவரம் தனியார் விடுதியில் தங்கும் அமித் ஷா, காலையில் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் பகல் 1.30 மணிக்கு மண்டபம் ஹெலிபேட் தளத்திலிருந்து மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி செல்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/26/large/1067233.jpgகலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: மூன்று நாட்களில் 36 லட்சம் விண்ணப்பங்கள்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் முதல் மூன்று நாட்களில் 36 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசு விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூலை 24ம் தேதி தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். விண்ணப்பப் பதிவு முகாம்களை இரண்டு கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, July 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/26/large/1067125.jpgதமிழக மீனவர்கள் 9 பேரை மீட்க கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் தமிழகத்தை சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்டகாலமாக நிலவிவரும் இப்பிரச்சினையை தீர்க்க தூதரக அளவிலான முயற்சிகளை முடுக்கிவிடுமாறு சமீபத்தில் கோரிக்கை விடுத்தேன். இருப்பினும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது கவலையை ஏற்படுத்திவரும் நிலையில், ஏமாற்ற உணர்வுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/26/large/1065954.jpgஒகேனக்கல்லை வந்தடைந்தது காவிரி தண்ணீர் - நீர்வரத்து 10,000 கனஅடியைக் கடக்க வாய்ப்பு

தருமபுரி: கர்நாடகா மாநில அணைகளில் இருந்து காவிரியாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று (ஜூலை 25) மாலை தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை அடைந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 19-ம் தேதி காலை அளவீட்டின்படி நீர்வரத்து விநாடிக்கு 1,200 கன அடி என்ற அளவில் இருந்தது. அதற்கு அடுத்த நாளான 20-ம் தேதி காலை அளவீட்டின்போது விநாடிக்கு 1,000 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. அன்றிலிருந்து நேற்று (ஜூலை 25) மாலை வரை விநாடிக்கு 1,000 கன அடியாகவே நீர்வரத்து தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில், பெற்று மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 2,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. 6 மணியளவில் இது விநாடிக்கு 3,000 கன அடியாகவும், இரவு 9 மணி அளவீட்டின்போது விநாடிக்கு 5,000 கன அடியாகவும் உயர்ந்தது. தொடர்ந்தும் படிப்படியாக நீர்வரத்து அளவு அதிகரித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/25/large/1065948.jpgமதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவை குறைவு: உயர் நீதிமன்றம் பாராட்டு

மதுரை: மதுரை உட்பட தென் மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவை 65.77 சதவீதம் குறைந்துள்ளது பெரிய முன்னேற்றம் என உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த பிரினிஷ் பிரபு தாஸ் என்ற பிரின்ஸ் பிரபு தாஸ் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: என் மீதான வழக்கு முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தேன். விசாரணையின் போது என் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, July 24, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/25/large/1065833.jpgகலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பெற விண்ணப்ப பதிவு - தருமபுரியில் முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தருமபுரி: கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்ப பதிவை தருமபுரி மாவட்டம் தொப்பூரில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தகுதி வாய்ந்த பயனாளிகள் யாரும் விடுபடாத வகையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும். இத்திட்டத்தால் பெண்கள் சுயமரியாதையும், பொருளாதார விடுதலையும் அடைவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாம் தொடக்க விழா தருமபுரி மாவட்டம் தொப்பூரில் நேற்று நடந்தது. தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/24/large/1064331.jpgசிவகாசி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து - ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

சிவகாசி வேலாயுதரஸ்தா பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(47). இவர் சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் பகுதியில் ஆர்.ஆர் மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வந்தார். இங்கு நேற்று 15 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். இங்கு நேற்று மதிய உணவு இடைவேளையின் போது வேதிப்பொருட்கள் கலவை செய்யும் இயந்திரத்தில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/24/large/1064330.jpgநீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படாது - சட்ட அமைச்சரிடம் தலைமை நீதிபதி உறுதி

சென்னை: நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நீதிமன்றங்களில் டாக்டர் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவை சந்தித்து இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, July 23, 2023

https://ift.tt/ZbKDNxn மக்களவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: வரும் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிக்கு கடுமையாகப் பாடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திமுக தமிழகத்தை 6-வது முறையாக ஆளும் இயக்கமாக மட்டுமின்றி, இந்திய வரலாற்றின் முக்கிய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத இயக்கமாகவும் செயலாற்றி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/24/large/1062349.jpgமுதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

மேட்டூர்: ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு என முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குரும்பபட்டி, காவடிக்காரனுர், வெள்ளகல்பட்டி, எட்டிக்குட்டைமேடு பகுதிகளில் கொங்கணாபுரம் ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்ட அதிமுக கொடியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு ஏற்றி வைத்தார். முன்னதாக, அவருக்கு, கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/23/large/1062344.jpgமணிப்பூர் கொடூரம் | சென்னையில் கனிமொழி தலைமையில் நடந்த திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

சென்னை: மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சென்னையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

“மனித இனத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும் மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தவறி, தனது வெறுப்பு அரசியலுக்கு மணிப்பூரைப் பலிகொடுத்திருக்கும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசைக் கண்டித்து, திமுக மகளிர் அணி சார்பில் இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, July 22, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/23/large/1061747.jpgதமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு
திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூலை 23) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/23/large/1061739.jpgதமிழகத்தின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

மயிலாடுதுறை: பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை-மைசூர் விரைவு ரயில் நின்று செல்வதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம்.எஸ். அன்பழகன் தலைமை வகித்தார். மாநிலங்களவை எம்.பி எஸ். கல்யாணசுந்தரம், பாபநாசம் பேரூராட்சி தலைவர் க.பூங்குழலி முன்னிலை வகித்தனர். மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ரயிலை கொடியசைத்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், "இந்தியாவில் ரயில்வே துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இந்த துறை தொடர்பாகத் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/22/large/1061737.jpgமகளிர் உரிமைத் தொகை | கூட்டுறவு வங்கிகளில் ‘ஜீரோ பேலன்ஸ்’ சேமிப்பு கணக்கு: இணைப்பதிவாளர் தகவல்

மதுரை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற கூட்டுறவு வங்கிகளில் ‘ஜீரோ பேலன்ஸ்’ சேமிப்பு கணக்கு தொடங்கப்படும் என மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இனணப்பதிவாளர் சி.குருமூர்த்தி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக வீடு தேடி கொடுக்கப்படும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து முகாம் நடக்கும் நாளில் சேர்க்க வேண்டும். இதனுடன், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், மின் கட்டண அட்டை அசல் வழங்க வேண்டும். அதன்படி, வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்காக சேமிப்பு கணக்கு தொடங்க, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ‘ஜீரோ பேலன்ஸ்’ சேமிப்பு கணக்குகள் தொடங்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/22/large/1061734.jpgமேட்டூர் அணை நீர்மட்டம் சரிவால் 2 ஆண்டுகளுக்குப் பின் வெளியே தெரியும் நந்தி சிலை

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 2 ஆண்டுக்கு பிறகு 70 அடிக்கு கீழ் சரிந்த நிலையில், நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை வெளியே தெரிந்தது.

மேட்டூர் அணை நீர்தேக்கம் 60 மைல் பரப்பளவை கொண்டுள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்ட போது, காவிரி கரையில் இருந்த மக்கள் மேடான பகுதிக்கு குடியமர்த்தப்பட்டனர். அப்போது, விளை நிலங்கள், பெரிய நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேசுவரர் கோயில், பழமை வாய்ந்த கிறிஸ்துவ ஆலயம் மக்கள் இடிக்காமல் அப்படியே விட்டு சென்றனர். அணையின் நீர்மட்டம் குறையும் போது, காவிரி கரையோர பகுதியில் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அப்போது, நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் வெளியே தெரியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/22/large/1061732.jpgசெறிவூட்டப்பட்ட அரிசி வழங்க தடை விதிக்க கோரி மனு - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ரேஷன் கடை, சத்துணவு திட்டம் வாயிலாக உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதை தடை விதிக்க கோரிய வழக்கிற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், முருகன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கனிமொழி மணிமாறன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது, "தமிழ் தேசிய பேரியக்கத்தின் உள்ள மகளிர் ஆயத்தின் செயலாளராக உள்ளேன். பொதுவாக பெரும்பாலான இந்திய பெண்களுக்கு ரத்த சோகை இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதற்கு ஏழ்மை, உணவு பழக்கம் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், மத்திய அரசு, இதுகுறித்து எந்த ஒரு முறையான ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல், செறிவூட்டப்பட்ட அரிசியை மக்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/22/large/1061733.jpgகோவை அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள வேம்பு நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (34). இன்ஜினியரிங் டிசைனர். இவரது மனைவி லக்ஷயா. குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து வந்தார்.

இவர்களுக்கு ரக்ஷிதா(10) என்ற மகள் உள்ளார். ராஜேஷின் தாயார் பெயர் பிரேமா(73). கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் வீடு கதவு திறக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று (22-ம் தேதி) இரவு இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, July 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/22/large/1061641.jpgசெந்தில் பாலாஜி மனைவி மேல்முறையீடு - அமலாக்கத் துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவுக்கு, அமலாக்கத் துறை, ஜூலை 26-க்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம்தேதி கைது செய்தனர். இந்நிலையில், செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அவருடைய மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/22/large/1060848.jpgமகளிர் திட்டங்களை தருமபுரி மண்ணில் தொடங்குவது திமுக ஆட்சியின் வழக்கம்: வேளாண் அமைச்சர் பெருமிதம்

தருமபுரி: மகளிருக்கு பயனளிக்கும் திட்டங்களை தருமபுரி மண்ணில் தொடங்குவது திமுக ஆட்சியின் வழக்கம் என தருமபுரியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நேற்று (ஜூலை 21) தருமபுரியில் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி, வரும் 24-ம் தேதி தருமபுரி மாவட்டம் தொப்பூரில் நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ள பகுதியை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று (ஜூலை 21) மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/21/large/1060845.jpg‘நியோ மேக்ஸ்’ மோசடி | பாதிக்கப்பட்டோர் ஒரே இடத்தில் புகார் அளிக்க ‘மனு மேளா’: மதுரையில் இன்று நடக்கிறது

மதுரை: நியோ மேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் ஒரே இடத்தில் புகார் அளிக்கும் விதமாக மதுரையில் இன்று (ஜூலை 22) ‘மனுக்கள் மேளா’ நடக்கிறது.

விருதுநகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது நியோ-மேக்ஸ் என்ற ரியல் எஸ்டேட் மற்றும் தனியார் நிதி நிறுவனம். இந்நிறுவனத்துக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களும் உள்ளன. கூடுதல் வட்டி தருவதாக ஆசை வார்ததைகள் காட்டி, வாடிக்கையாளர்களிடம் சுமார் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து ஏமாற்றியுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/21/large/1060844.jpgகோவை | முறையாக சிகிச்சை அளிக்காததால் நோயாளி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு - அரசு மருத்துவமனை டீன் விளக்கம்

கோவை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ்- காளியம்மாள் தம்பதியினரின் மகன் ராஜேஷ்குமார் (39). பாலிசிஸ்டிக் கிட்னி நோய் பாதிப்புக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று முன்தினம் (ஜூலை 20) உயிரிழந்தார். இந்நிலையில் ராஜேஷ்குமாரின் உயிரிழப்புக்கு அரசு மருத்துவமனையே காரணமே என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

மேலும், அரசு மருத்துவமனையில் மருந்துகளை வெளியில் வாங்குமாறு மருத்துவர்கள் கூறியதாகவும், லஞ்சம் கேட்பதாகவும், செவிலியர்கள் முறையாக நோயாளிகளை கவனித்துக் கொள்வதில்லை எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/21/large/1060839.jpgநெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம்

சென்னை: நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யவும், பேரிடர் காலங்களில் உடனடியாக தக்க நிவாரண பணிகளை மேற்கொள்ளவும், வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஏற்கெனவே ஆணையிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, July 20, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/20/large/1059515.jpgகும்பகோணம் மாநகராட்சி வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்ய இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சி சார்பில் நடைபெற்றுள்ள வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து உரிய ஆய்வு செய்து, அதில் முறைகேடுகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என கண்டறிய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் டி.குருமூர்த்தி, தமிழக முதல்வர் உள்பட 13 துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில், "கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த வளர்ச்சி திட்ட பணிகளை செய்த ஒப்பந்தகாரர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தார் மற்றும் சிமென்ட் சாலைகள் முறையாக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. பல்வேறு பகுதிகளில் சிமென்ட் சாலையின் மேலேயே தார் சாலைகள் போடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, July 19, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/20/large/1059432.jpgஆன்லைன் விளையாட்டு தடை சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை: நிறுவனங்கள் சார்பில் வாதம்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/20/large/1059440.jpgகுடிநீர் தொட்டிகளை மையப்படுத்தி நடக்கும் குற்றச் செயல்கள்: பாதுகாப்பு அம்சங்களை மறுஆய்வு செய்ய கோரிக்கை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் உட்பட தமிழகம் முழுக்க உள்ள குடிநீர் கட்டமைப்புகளின் பாதுகாப்பு அம்சங்களை மறு ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 4 மாதத்தில் 2 மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளில் அத்துமீறல் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், குடிநீர் கட்டமைப்புகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கோரிக்கை எழுந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/20/large/1058000.jpgதமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும்: இபிஎஸ் பேச்சு

கோவை: தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் நேற்று (ஜூலை 19)அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவை பொருத்தவரை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஏற்கெனவே உள்ள உறுப்பினர்கள் புதுப்பித்தல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கின்ற பணி நடைபெறும். தற்போது அந்த பணி தொடங்கி, நடைபெற்று வருகிறது. தற்போதுவரை 1.75 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எங்களுடைய இலக்கு இரண்டு கோடி. அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, July 18, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/19/large/1056366.jpgவீட்டில் இருந்தே செவிலியர்கள் சீருடை அணிந்து வரத் தடை - அரசு மருத்துவமனைகளில் உடை மாற்ற வசதி வருமா?

மதுரை: வீட்டிலிருந்தே செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு ‘சீருடை’ அணிந்து வரக்கூடாது என்று மருத்துவக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டநிலையில் அரசு மருத்துவமனைகளில் சீருடை மாற்றுவதற்கு போதுமான அறை வசதி இல்லாததால் செவிலியர்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள், வெள்ளை சீருடை அணிந்து பணிபுரிவார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள், இதுவரை வீட்டில் இருந்தே சீருடைகளை அணிந்து கொண்டு மருத்துமவனைக்கு வருவார்கள். சொற்பமானவர்களே சீருடைகளை கையில் எடுத்து வந்து, மருத்துவமனைக்கு வந்து அவற்றை மாற்றுவார்கள். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற தமிழகத்தில் உள்ள பெரிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 400க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிபுரிகிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்