
கரோனாவால் முடங்கிய கிராம மக்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் மூங்கில் மூலம் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி தருகிறார்.
புதுச்சேரி சேலியமேடு கவிஞரேறு வாணிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நுண்கலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் உமாபதி. இவர் கிராமப்புற பகுதிகளில் தென்னை, பனை மரங்களிலிருந்து கிடைக்கும் பொருட்களை கலைப் படைப்புகளாக மாற்றுவதில் வல்லமை படைத்த மாணவர்களை உருவாக்கியுள்ளார். ஆசிரியர் உமாபதி வழிகாட்டுதல்படி பல கண்காட்சிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். அத்துடன் திருச்சி, சென்னை, புதுச்சேரி என பல நகரங்களில் தனியார் கல்லூரிகளில் கலை வகுப்புகளும் எடுத்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
















































