
வருவாய்த் துறையில் பட்டா கணினிமயமாக்கப்பட்டபோது, உரிமையாளர் பெயர், நிலத்தின் அளவு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவேற்றம் செய்ததில் ஏற்பட்ட குழப்பத்தால், பொதுமக்கள் ஆவணங்களுடன் அலைக்கழிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் காகிதமில்லா நிலையை உருவாக்கவும், ஆவணங்கள் தேடல் உள்ளிட்டவற்றுக்கான காலதாமதம் மற்றும் முறைகேடுகளை தவிர்க்கவும் பெரும்பாலான துறைகளின் செயல்பாடுகள் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. இதில், வருவாய்த் துறையின் கீழ் உள்ள நில நிர்வாகத் துறை, அளவைத் துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் கடந்த 1992-ம் ஆண்டு முதலே கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்