
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஓபிஎஸ்-ஐ விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து நேற்று விசாரித்தார். இந்த வழக்கில், ஆட்சி மாறும் போதெல்லாம் பச்சோந்தி போல லஞ்ச ஒழிப்புத் துறை நிறம் மாறுவதாக பகிரங்கமாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2001-06 அதிமுக ஆட்சி காலத்தில் வருவாய்த் துறை அமைச்சராகப் பதவி வகித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவுசெய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
















































