Tuesday, August 29, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/29/large/1113044.jpgகோவையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்

கோவை: ஓணம் பண்டிகையையொட்டி, அத்தப் பூ கோலம் வரைந்தும், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தும் கோவையில் வசிக்கும் மலையாள மொழி பேசும் கேரள மக்கள், ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

மலையாள மொழி பேசும் கேரள மாநில மக்களால், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகை, ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள கோவையில் வாளையாறு, வேலந்தாவளம், நவக்கரை, மீனாட்சிபுரம், ஆனைக்கட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலையாள மொழி பேசும் கேரள மக்கள் வசிக்கின்றனர். நடப்பாண்டு ஓணம் பண்டிகை தினத்தையொட்டி, கோவையில் இன்று (ஆக.29) ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகையையொட்டி கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...