
சென்னை: சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல்-ஜெனிபர் தம்பதியின் மகன் தீக்‌சித் (8), ஆழ்வார் திருநகர் விரிவாக்கப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 28-ம் தேதி பள்ளி வேன் மோதியதில் தீக்சித் உயிரிழந்தான்.
இது தொடர்பாக, பள்ளித் தாளாளர் ஜெயசுபாஷ், தலைமை ஆசிரியை தனலட்சுமி, வேன் ஓட்டுநர் பூங்காவனம், குழந்தை கவனிப்பாளர் ஞானசக்தி ஆகியோர் மீது வளசரவாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர், ஓட்டுநர் பூங்காவனம், ஞானசக்தி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
















































