
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத நிலையை ஏற்படுத்தி வீடு தோறும் மஞ்சப்பை வழங்கும் திட்டம் விரைவில் தொடங் கப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார். அரசு அலுவலர்களால் நேற்று ஒரே நாளில் 3.5 டன் பிளாஸ்டிக் குப்பை அகற்றப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக் கடை பேருந்து நிலையத்தில் 75-வது சுதந்திர தின திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு வார நிகழ்வு நேற்று முன்தினம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிளாஸ்டிக் இல்லாத ராணிப்பேட்டை மாவட்டம் என்ற இலக்கை அடைய அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கூட்டு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்