
உதகை: உதகையில் மகளிர் தயாரிக்கும் சாக்லேட்கள் இந்தியாவின் சிறு, குறு நிறுவனங்களின் பெரும் ஆற்றலுக்கு சான்றாகும் என ராகுல் காந்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த 12-ம் தேதி நீலகிரி மாவட்டம் வந்தார். உதகை அருகே எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார். அங்கு, பெண்கள் சாக்லேட் தயாரிப்பதை பார்வையிட்டதுடன், அவர்களுடன் இணைந்து சாக்லேட் தயாரித்தார். இதுதொடர்பான வீடியோவை, ட்விட்டரில் ராகுல் நேற்று பகிர்ந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்