
சென்னை: மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க உதவும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த, மின்வாரியம் டெண்டர் கோரியுள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தைக் கணக்கெடுக்க ஸ்டேடிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று மின் பயன்பாட்டைக் கணக்கெடுத்து வருகின்றனர். இதில் சில சமயங்களில் தவறுகள் நடப்பதால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்