
சென்னை: மூன்று அமைச்சர்கள் மீதான வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கும் அறிவிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றங்கள் விடுவித்த நிலையில், அமைச்சர்கள் க.பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான வழக்குகளை தாமே முன்வந்து விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்