
சென்னை: இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் எப்போதும் முதல் ‘பெஞ்ச்’ மாணவன்தான் என்று அவரது பள்ளி இயற்பியல் ஆசிரியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) சந்திரயான்-3 திட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அனுப்பப்பட்ட லேண்டர், ரோவர் கலன்கள் நிலவில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநரான இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது. இவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்பதால் தமிழகம் கூடுதல் பெருமிதத்துடன் கொண்டாடி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்