
மதுரை: அதிமுக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு 500 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மதுரை மாநாட்டு பந்தல், மேடை மற்றும் முகப்பு அலங்காரம் போன்றவை மின்னொளியில் ஜொலித்தது, மாநாட்டிற்கு வந்த தொண்டர்களை கவர்ந்தது.
அதிமுக பொதுச்செயலாளராக கே.பழனிசாமி பொறுப்பேற்றபோது மதுரையில் கட்சியின் மாநில மாநாடு ஆகஸ்ட் 20ம் தேதி நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை அதிமுக மாநில மாநாடு பொன்விழா எழுச்சி மாநாடாக மதுரையில் நடக்கிறது. மாநாட்டின் நுழைவு வாயிலில் அண்ணாத்துரை, எம்ஜிஆர், ஜெயலலிதா, கே.பழனிசாமியின் ஆள் உயர பிரமாண்ட உருவ கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. மாநாட்டில் திரளும் தொண்டர்கள் அனைவரும் இந்த பிரமாண்ட கட் அவுட்களை பார்க்கும் வகையில் 50 அடி உயர ‘கட் அவுட்’ களாக அமைக்கப்பட்டிருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்