
திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்து பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் தப்பினார். அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் இலங்கை, பங்களாதேஷ், ரஷ்யா, நைஜீரியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 115 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இங்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேற்று கணக்கெடுப்பு நடத்தினர். அப்போது பல்கேரியாவைச் சேர்ந்த இலியன் ஸ்ட்ராகோவ் மார்கோவ் (55) என்பவரைக் காணவில்லை. அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது ஜன்னல் கம்பிகளை அறுத்து, அதன் வழியாக அவர் தப்பியது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்