
சென்னை: குரூப் 2 தேர்வில் மீண்டும் திருக்குறளை சேர்த்து புதிய பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், முதன்மைத் தேர்வு பிரிவில் திருக்குறள் குறித்த 6 பகுதிகளும் முழுமையாக நீக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதற்கு தமிழ் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினர் பலத்த எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்