
ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோயில் நிலத்தைக் கண்டறிந்து மீட்பதற்கு அரசு துறைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
இதுதொடர்பாக திருத்தொண்டர்கள் சபைத் தலைவரான சேலம் ஏ.ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘சென்னை போரூர் அருகேநந்தம்பாக்கத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு சொந்தமான 150 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் தங்களது பெயருக்கு மாற்றம் செய்து பலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் நிர்வாகஆணையருக்கு புகார் அளித்தும்எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அந்த நிலத்தைமீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்