
சென்னை: காட்பாடி அருகே உள்ள ரயில்வேபாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. இன்று முதல் வழக்கம்போல இத்தடத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரக்கோணம் - காட்பாடி தடத்தில் திருவலம் - முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்வே பாலத்தில் விரிசல்இருப்பது கடந்த 23-ம் தேதி கண்டறியப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்