
சென்னை: நகர்ப்புற மகளிர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை உருவாக்கவும், மகளிர் பாதுகாப்பு திட்டமான நிர்பயா திட்டத்தை கண்காணிக்கவும் மாநகராட்சி சார்பில் “பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் சேவையை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தொடங்கிவைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம் மற்றும் பயிற்சி கருத்தரங்கம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று கருத்தரங்கை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் கருத்தரங்கில் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்