
சென்னை: வரும் ஜூலை 11-ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் பதவியில் நீடிக்கத் தடை கோரியும் அதிமுக பொதுக்குழு உறுப்பினரான சண்முகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி அதிமுக பொதுக்குழு உறுப்பினரான திருப்பூர் எம்.சண்முகம் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்