Wednesday, June 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/22/large/817093.jpg'மருந்துகளில்லை, குறைதீர் கூட்டமில்லை' - நிர்வாக குறைபாட்டை கண்டித்து ஜிப்மர் மருத்துவ பேராசிரியர்கள் போராட்டம்

புதுச்சேரி: மருந்துகள் இல்லை, குறைதீர் கூட்டம் நடத்துவதில்லை, மோசமான நிர்வாகம் என அடுக்கடுக்காக பிரச்சினைகளைத் தெரிவித்து, போராட்டம் நடத்தப் போவதாக மருத்துவ பேராசிரியர்கள் ஜிப்மர் இயக்குநருக்கு ஆறு பக்கத்துக்கு கடிதம் அளித்துள்ளனர். முதல்கட்டமாக வரும் 24-ம் தேதி நிர்வாக அலுவலகம் முன்பு அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துவோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைத்துள்ளது ஜிப்மர் மருத்துவமனை. மத்திய அரசின் கட்டுபாட்டில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. கரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக வெளிப்புறச் சிகிச்சைகள் தொடர்ச்சியாக தரப்படாத சூழல் நிலவி வந்தது. தொலைபேசி வழியாக முன்பதிவு செய்து, அதன் பிறகே சிகிச்சைக்கு வரவேண்டிய நிலை இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...