Wednesday, July 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/27/large/831802.jpgசீமைக்கருவேலம், யூகலிப்டஸ் மரங்களை அகற்றுவது பேரவசியமாகிறது: சீமான்

சென்னை: "யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்குத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினைப் பெரிதும் வரவேற்கிறேன். சீமைக்கருவேலம், யூகலிப்டஸ் மரங்களை அகற்ற தமிழக அரசு விரைவாக செயல்திட்டத்தை வகுக்க வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. "தமிழக வனப்பகுதிகளிலுள்ள அந்நிய மரங்களை அகற்றக்கோரி தொடரப்பட்டப் பொது வழக்கொன்றில், விரைவாக அவற்றிற்கென செயல்திட்டத்தை வகுக்க வலியுறுத்தியும், யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்குத் தடைவிதித்தும் உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினைப் பெரிதும் வரவேற்கிறேன். ‘மரம் மண்ணின் வரம்; அதனை வளர்ப்பதே மனித அறம்’ எனும் உயரியக் கோட்பாட்டுக்கேற்ப, மரம் வளர்ப்பைப் பெரிதும் ஊக்கப்படுத்தி, அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் நாளும் ஏற்படுத்தி வரும் வேளையில், மரங்களின் பண்புகளுக்கு நேர்மாறானக் குணங்களைக் கொண்டுள்ள யூகலிப்டஸ் மரம், சீமைக்கருவேல மரம் போன்ற அந்நிய மரங்களை இம்மண்ணிலிருந்து அகற்ற வேண்டியதும் பேரவசியமாகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...