
கோவை: கோவைக்கு கொண்டு வரப்பட்ட, செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு அமைச்சர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்க உள்ளது. இதையொட்டி கடந்த மாதம் 19-ம் தேதி டெல்லி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றி வைத்து, ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பியாட் ஜோதி, புதுச்சேரியில் இருந்து கோவைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்