
மதுரை: ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் முதல் முறையாக ஓபிஎஸ் இல்லாத அதிமுக ஆர்ப்பாட்டம் நாளை நடக்கிறது. மின்கட்டண உயர்வுக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும் ஓபிஎஸ்-ஐ மீறி பெரும் கூட்டத்தை திரட்டி தனது செல்வாக்கை நிரூபிக்கவும், சொந்த மாவட்டத்திலே அவருக்கு செல்வாக்கு இல்லை என்பதை காட்டவும் இபிஎஸ் தரப்பினர் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பழனிசாமி அணி அதிமுக சார்பில் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசை கண்டித்து இன்று (திங்கள்கிழமை) ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் பார்ப்பதற்கு திமுக அரசை கண்டித்து நடப்பதாக அறிவிக்கப்பட்டாலும், பெரும் கூட்டத்தை திரட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்கள் பக்கம்தான் கட்சியும், தொண்டர்களும் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கவே பழனிசாமி ஏற்பாடுகள் செய்திருந்தாக பேச்சு எழுந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்