
சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த கோலாகலமான விழாவில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழகத்துக்கும் செஸ் போட்டிக்கும் இடையில் வலுவான வரலாற்று தொடர்பு உள்ளது என அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
உலக சதுரங்க கூட்டமைப்பு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அறிவிக்கப்பட்டதும், அதை நடத்தும் உரிமையை பெற்றது தமிழக அரசு. இதையடுத்து, ரூ.100 கோடியை ஒதுக்கி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் போட்டியை நடத்தவதற்காக ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜூலை 28-ல் தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்