
சென்னை: ‘ஏழைகள் ரதம்’ என்னும் ‘கரீப் ரத்’ ரயில்களுக்காக, புதிய எகானமி 3ஏசி பெட்டிகள் தயாரிப்பு சென்னை ஐ.சி.எஃப்-ல் தொடங்கி உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 723 பெட்டிகளைத் தயாரித்து வழங்க ஐ.சி.எஃப் இலக்கு நிர்ணயித்துள்ளது.
நாட்டில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களின் ரயில் போக்குவரத்து வசதிக்காக, ‘கரீப் ரத்’ என்னும் ‘ஏழைகள் ரதம்’ ரயில் 2006-ம்ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு வழித்தடங்களில் 48 ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் இந்த ரயில்கள் எண்ணிக்கை 2 ஆண்டுக்கு முன்பு குறைக்கப்பட்டன. தற்போது, நாடு முழுவதும் 26 ஜோடி ரயில்கள் இயக்கப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்