Wednesday, August 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/24/large/849984.jpgமதுரையில் நடக்கும் தேசிய நாட்டின நாய் கண்காட்சியில் சமூக நாய்களையும் சேர்க்க தமிழக அரசுக்கு ஆர்வலர்கள் கோரிக்கை 

மதுரை: மதுரையில் சனிக்கிழமை நடக்க இருக்கும் தேசிய நாட்டின நாய் கண்காட்சியில் சமூக நாய்களையும் இடம்பெற செய்ய கால்நடை பராமரிப்பு துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக நாய்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் க.ப.மாரிகுமார் கூறியதாவது: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வரும் 27-ம் தேதி சனிக்கிழமை தேசிய அளவிலான நாட்டின நாய் வளர்ப்பு கருத்தரங்கம் மற்றும் நாட்டின நாய்கள் கண்காட்சி நடக்கவிருக்கிறது. தேனியில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இந்த கண்காட்சியை ஒருங்கிணைத்து இருக்கிறது. அந்நிய நாட்டு நாய்கள் மோகம் நம் மக்களிடம் அதிகரித்துக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், நாட்டின நாய்களுக்கென்று பிரத்யேகமாக கருத்தரங்கமும், கண்காட்சியும் ஒருங்கிணைக்கப்படுவது வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுதலுக்குரியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...