
கோவை: திமுக எம்.பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட கோவை மாநகர், மாவட்ட பாஜக தலைவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, இந்து மதம் குறித்து அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது. ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, இந்து முன்னணி சார்பில் கடந்த 18-ம் தேதி கோவையில் 13 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பீளமேடு புதூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநகர், மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, ஆ.ராசா எம்.பி குறித்து மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்