
பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தும் முயற்சியில் போக்குவரத்துத் துறை ஈடுபட இருப்பதாக துறையின் அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் மக்களுக்கு ஆம்னி பேருந்து கட்டணம் பெரும் சுமையாக உள்ளது. வழக்கமான நாட்களில் அரசு பேருந்துகள் அளவிலான விலைக்கு பயணச்சீட்டுகளை வழங்கும் ஆம்னி பேருந்துகள், பண்டிகை நாட்களில் மட்டும் அளவுக்கு அதிகமாகக் கட்டணத்தை வசூலிப்பதாக மக்கள் தொடர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்