
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, தகுதியான பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கு வருமானவரித் துறை மற்றும் வருங்கால வைப்பு நிதி தரவுகளை வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் நிதியைக் கோருவதற்காக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் புதுடெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் நிதிதுறை சார்ந்த பல்வேறு அதிகாரிகளைச் சந்தித்து, தமிழக அரசு கோரிய நிதியை விடுவிக்க கோரும் கோப்புகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்