
சென்னை: தமிழகத்தில் மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளை அறிந்துகொள்வதற்காக மால்டா குடியரசு நாட்டின் அமைச்சர் ஜோ-எட்டியென் அபேலா தலைமையிலான குழுவினர் நேற்று சென்னை வந்தனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை, மால்டா அமைச்சர் சந்தித்து பேசினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்