
சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நட்சத்திர விடுதியில் கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்புப் பணியின்போது, விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்குதலா ரூ. 21 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் சென்னை - பெங்களூர் சாலையில் சத்தியம் கிராண்ட் என்ற நட்சத்திர விடுதி உள்ளது. இந்த விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக ஸ்ரீபெரும்புதூர் கீழண்டைத் தெரு பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் (51), நவீன்குமார் (30), திருமலை(25) ஆகிய 3 பேரும் உள்ளே இறங்கியுள்ளனர். இவர்கள் உள்ளே இறங்கி சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை நடத்தியது. அந்தக் கழிவுநீர் தொட்டியை ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்கினார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த திருமலை என்பவரின் சகோதரிக்கு அரசுப் பணிக்கான ஆணையை வழங்கினார். மூவரின் குடும்பத்தினருக்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்குவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. பின்னர், ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்