Monday, October 17, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/18/large/884674.jpgசிதம்பரத்தில் மறியல் போராட்டம் நடத்திய 25 தீட்சிதர்கள் மீது வழக்கு

கடலூர்: சிதம்பரத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக 3 தீட்சிதர்களை போலீஸார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 25 தீட்சிதர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது குழந்தை திருமணங்கள் நடத்தியது தொடர்பான புகார்கள் அவ்வபோது வருகின்றன. ஏற்கெனவே வந்த 2 புகார்களின் பேரில் 5 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்குகள் தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, மற்றொரு குழந்தை திருமணம் நடந்தாக வந்த புகாரின் பேரில் கடந்த 15-ம் தேதி மாலை, சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் ஹேம சபேச தீட்சிதர், வினோபாலா தீட்சிதர், மற்றும் அவரது 17 வயது மகனான மற்றொரு தீட்சிதர் ஆகிய 3 பேரையும் கடலூர் மாவட்ட டெல்டா போலீஸார் கைது செய்து விசாரணைக்காக கடலூருக்கு அழைத்து சென்றனர். இதைக் கண்டித்து சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கீழ சன்னிதி அருகே கீழ வீதியில் தரையில் அமர்ந்து இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் பாஜகவினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...