
சென்னை/சேலம்/ஈரோடு/தேனி: மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களுக்கு தமிழகம் முழுவதும் நேற்று சீல் வைக்கப்பட்டது.
தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்பினருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை கடந்த மாதம் சோதனை நடத்தின. இதுதொடர்பாக தமிழகத்தில் அந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 11 பேர் உட்பட நாடு முழுவதும் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்