
சென்னை: சீனாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், அங்கிருந்துவரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக, மத்திய அரசிடம் அறிவுறுத்தல்கள் பெற்று, அதன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்