
மதுரை: நாட்டில் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற சட்டப்பிரிவை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் குன்னூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். திமுக சொத்து பாதுகாப்புக் குழு உறுப் பினராக உள்ளார். இவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: நாட்டில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினருக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்