
சென்னை: சென்னை மியாட் மருத்துவமனையில் அவசரகால பிரத்யேக வெளியேற்று சாய்தளம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை மியாட் மருத்துவமனையில், வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் திடீர் தீவிபத்து போன்ற அவசர காலங்களில், வார்டில் இருந்து சுலபமாக வெளியேறுவதற்கு ஏதுவாக, பிரத்யேக அவசரகால வெளியேற்று சாய்தளம் (Emergency Ramp) திறக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை இயக்குநர் பி.கே.ரவி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபிக்கள் ரமணி, அனூப் ஜெய்ஸ்வால், மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ், நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்