
சென்னை: திமுக ஆட்சிக்கு மக்களிடத்தில் கிடைத்த நல்ல பெயரை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, ஆட்சியின் மீது சேற்றைவாரிப் பூசும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்றுசந்தித்து 10 பக்க மனுவை அளித்தார். அதில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக மத்திய உளவு ஏஜென்சிகள் தகவல் அளித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்