
சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுவரை 1.62 கோடி மின் நுகர்வோர், தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். சிறப்பு முகாம் மூலம் 87.91 லட்சம் பேரும், ஆன்லைன் மூலம் 74.67 லட்சம் பேரும் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 77.53 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 50.93 சதவீதம் பேரும் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்