
சென்னை: தமிழகத்தில் யார் தலைமையிலான கூட்டணியில் இருக்கிறோம் என்றே தெரியாத நிலையில், 2024 மக்களவை தேர்தல் பற்றி பாஜக கனவு காண்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 138-வது ஆண்டு நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை போரூர் லட்சுமி நகரில் மாரத்தான் ஓட்டம், நடைபயணத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் அமைச்சர் கக்கன் சிலையை திறந்துவைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: சுதந்திரப் போராட்ட தியாகியும், காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவருமான பி.கக்கன், எளிமை, நேர்மையில் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்