
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சிகளின் ஏரியா சபை உறுப்பினர்களாக பெண்கள், வணிகர்கள், சிறுபான்மையினர் என பல தரப்பினரையும் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 48.45 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். கடந்த 2001 முதல் 2011-ம் ஆண்டுக்குள் மட்டும் 27 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் குடியேறியுள்ளனர். இது வரும் 2036-ம் ஆண்டு மக்கள் தொகை கணிப்பின்படி நகர்ப்புறங்களில் வாழ்வோர் எண்ணிக்கை 60 சதவீதமாக இருக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்