Tuesday, February 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/22/large/947755.jpgஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 238 வாக்குச்சாவடி மையங்களில், 5 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1 கட்டுப்பாட்டு கருவி, 1 வி.வி.பேட் ஆகியவை பயன்படுத்தப்படவுள்ளன. வாக்குப்பதிவானது வரும் 27-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கவுள்ளது.

இந்நிலையில், அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால், வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளரைத் தேர்வு செய்யும் வகையில் வாக்குப்பதிவு நேரத்தை கூடுதலாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை; மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடியில் இருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் காத்திருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...