
மயிலாடுதுறை: மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. சங்க நிறுவனர் தலைவர் ஜெனிபர் ச.பவுல்ராஜ் தலைமை வகித்தார். சங்கத்தின் சிறப்புத் தலைவர் சு.சிவலிங்கம், மயிலாடுதுறை உலகத் தமிழ்க் கழகத் தலைவர் சிவ.கோ, தமிழ்த் தேசிய முன்னணி நிர்வாகி கு.பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மயிலாடுதுறை திருக்குறள் பேரவைத் தலைவர் சி.சிவசங்கரன், தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவைத் தலைவர் துரை.குணசேகரன் ஆகியோர், தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற ஜெனிபர் ச.பவுல் ராஜின் தமிழ்ப் பணிகள் குறித்து பாராட்டிப் பேசினர். பாவலர் கு.ரா எழுதிய ‘சூரியனைத் துயிலெழுப்பு’ என்ற நூலை, மதுரை கவிஞர் ரேவதி அழகர்சாமி வெளியிட, மன்னம்பந்தல் அ.வ.அ.கல்லூரி தமிழாய்வுத் துறை தலைவர் சு.தமிழ்வேலு பெற்றுக் கொண்டு, நூலை பாராட்டிப் பேசினார். பாவலர் கு.ரா ஏற்புரையாற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்