
சென்னை: வினாத்தாள் பதிவெண் மாற்றக் குளறுபடியால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று குரூப் 2 தேர்வு முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக தொடங்கி நடைபெற்றது. இதனால் தேர்வர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
தமிழக அரசுத் துறைகளில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர் உட்பட பல்வேறு பதவிகளில் உள்ள 5,446 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 9 லட்சத்து 94,890 பட்டதாரிகள் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நவம்பர் 8-ம் தேதி வெளியிட்டது. அதன்படி முதல்நிலைத் தேர்வு எழுதியதில் மொத்தம் 57,641 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்