
கோவை: கோவையில் ரசாயன பவுடர் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 575 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் ஆணையர் உத்தரவின் பேரில், கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச் செல்வன் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 8 குழுக்களாக பிரிந்து, கடந்த 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பழக் கடைகள், குடோன்கள், அடைத்து வைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் தயாரிப்பு நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், விற்பனை நிறுவனங்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்