
சென்னை: மாஞ்சா நூல் பட்டத்தால் இளைஞர் காயமடைந்துள்ளார். தடையை மீறி மாஞ்சா நூல் பட்டம் பறக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் நிக்கி சரண் (33). அவரது பெண் நண்பர் வந்தனா (33). சாலி கிராமத்தை சேர்ந்தவர். இருவரும் ஒரே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் தேனாம்பேட்டை விஜயராகவா தெருவில் சென்றனர். அப்போது மாஞ்சா நூல் பட்டம் ஒன்று பறந்து வந்து நிக்கி சரண் கழுத்தில் மாட்டியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்