
கோவை: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யுமாறு ராகுல் காந்தி அழைப்பு விடுத்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
வரும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, கட்சியின் கோவை, சேலம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் பேசியதாவது: ஜனநாயகத்தைப் பாதுகாக்க, கட்சியின் செயல்பாடுகளை வேகப்படுத்த வேண்டும். நிர்வாகிகளின் செயல்பாடுகள் அடிப்படையில் பொறுப்பும், அங்கீகாரமும் வழங்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்