
சென்னை: கலைமாமணி விருதாளர்களுக்கு அரசுப் பேருந்துகளில் வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பாஸ் அளிக்க கோரப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை நேற்று நடந்த மும்முடிச்சோழன் நாடக விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் எழுப்பினார்.
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கொண்டாடி வருகிறது. இதன்சார்பில் மூன்றாவது நிகழ்ச்சியாக நேற்று மாலை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘மும்முடிச்சோழன்’ நாடக அரங்கேற்றம் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்